Friday, March 26, 2010

திருத்தேர்


பங்குனி திருவிழாவின் பதினேழாம் நாளன்று (22.03.2010) ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருத்தேரில் வலம் வந்தார். மிக பிரம்மாண்டமான திருத்தேரை பொதுமக்கள் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உதவியுடன் இழுத்தனர். 'லீவ் விடு லீவ் விடு, நாளைக்கு லீவ் விடு' போன்று பலவாறாக கூச்சலிட்டபடி ரசித்து மகிழ்ந்து தேரை இழுத்தனர் தேசிய மேல்நிலைப்பள்ளி சிறார்கள். அதனைக்கண்டு ஆசிரியர்களும் ரசித்து மகிழ்ந்தனர். இதனைக்கண்ட பலபேருக்கு தங்களது சிறுவயது ஞாபகங்கள் நிச்சியமாக வந்திருக்கும். மெல்ல ஆடி அசைந்தபடி திருத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்ததை காண கண் கோடி வேண்டும்.





பதினெட்டாம் நாள் பூப்பந்தலுடன் பங்குனி திருவிழா இனிதே நிறைவுற்றது.

13 comments:

RVS on March 26, 2010 at 6:31 PM said...

May I know the Blog Owner. I am RVSM from Haridhranadhi East.

மன்னார்குடி on March 26, 2010 at 6:52 PM said...

@RVS

Kindly mail me to this ID:
rajamannargudi@gmail.com

மாயவரத்தான் on March 27, 2010 at 6:27 PM said...

யாருப்பா இந்தக் கடைக்காரர். செல்லாது.. செல்லாது... 'மன்னார்குடி' சாதனையாளர்கள் பட்டியலில் வேண்டுமென்றே ஒரு மிகப் பெரிய சாதனையாளர் குடும்பத்தினரை தவிர்த்துள்ளீர்களே?!

மன்னார்குடி on March 27, 2010 at 6:40 PM said...

@மாயவரத்தான்....

வாங்க வாங்க.. அதெப்படிங்க என் பேர நானே போட்டுக்கறது? என் பேரு சாதனையாளர்கள் பட்டியல்-ல இல்லைங்கற உங்க கோவம் எனக்கு புரியிது. இருந்தாலும் நம்மளே நம்ம பேர போட்டுக்கிட்டா நல்லாருக்குமா சொல்லுங்க?!

Madhavan Srinivasagopalan on March 30, 2010 at 1:15 PM said...

//இதனைக்கண்ட பலபேருக்கு தங்களது சிறுவயது ஞாபகங்கள் நிச்சியமாக வந்திருக்கும்.//

இதனை கண்ட .. இல்லை இல்லை.. கேட்ட எனக்கும் பழைய ஞாபகங்கள் வருகிறது.. எங்கள் பள்ளி நாட்களில் தேர் இழுக்கும்போது,
"நிலைக்கு வந்தா (ல்), லீவு உண்டா ?", "மேள / தப்பு / வேட்டு க்கார அண்ணாச்சி.. மேள / தப்பு / வெட்டு சத்தம் என்னாச்சி ?",
"கோபாலா!, கோவிந்தா!", "போடாதே போடாதே, முட்டக் கட்டைய போடாதே".. அப்படி சொல்லுவோம்.
நல்லாத்தெரியும், முட்டுக் கட்டை போடலேன்னா தேர் கட்டுப்பாட்டில் இருக்காதென்பது. இருந்தும் அப்படி சொல்லுவோம்..
நினைவு படுத்தியமைக்கு நன்றி.
பழைய நினைவுகளில்.
மாதவன்.

மன்னார்குடி on March 30, 2010 at 1:45 PM said...

@Madhavan

"கோபாலா!, கோவிந்தா!", "போடாதே போடாதே, முட்டக் கட்டைய போடாதே".. இவையிரண்டும் இம்முறையும் ஒலித்தன. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாதவன்.

Menaga Sathia on March 30, 2010 at 4:23 PM said...

அழகான புகைப்படத்தொகுப்பு!!மிகவும் ரசித்தேன்.நன்றி உங்களுக்கு!!

மன்னார்குடி on March 30, 2010 at 4:47 PM said...

@Mrs.Menagasathia

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகாஜி.

தம்பி.... on April 8, 2010 at 1:27 PM said...

சூப்பர்,
போச்சி, போச்சி பணத்தை தேடுவதில் எல்லா இன்பங்களையும் தொலைதுவிட்டோம்க்ற பீலிங் வருதுப்பா.....
தெப்பம் கவரேஜ் பண்ணலையா ?

தம்பி.... on April 8, 2010 at 1:38 PM said...

@RVS
Mr.RVSM பான்பராக் போடுற பழக்கத்த விட்டாச்சா ?
அத்லெட் பாண்டி, நீங்க எல்லாம் சேர்ந்து உங்க வீட்டுக்கு நேர் பின்னாடி செல்வானந்தா நகர்ல கிரிக்கெட் விளையாடும் போது உங்கள பார்த்திருக்கேன், திடீர்னு கானா போய்டிங்க.....என்ன உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல....but பார்த்திருக்கலாம்....Any Way இந்த ப்ளாக் மூலமா உங்கள பத்தி தெரிஞ்சிகிட்டதுல மகிழ்ச்சி......

தம்பி.....from சூரத்...........

மன்னார்குடி on April 8, 2010 at 8:48 PM said...

@தம்பி....

அப்போ சீக்கிரமா ஊருக்கு வாங்க. ஆனி மாசம் தெப்பம் கவர் பண்ணிடுவோம் தம்பி..

divakar on March 11, 2012 at 8:54 PM said...

hi frnd enakum palaya nal ninavukal niyapakam vanthuruchi,5 nimitam en palli natkaluku sentrathaka ninakiren


thanks frnd
cm.divakar

porz said...

betmatik
kralbet
betpark
tipobet
slot siteleri
kibris bahis siteleri
poker siteleri
bonus veren siteler
mobil ödeme bahis
YG30R6

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice